Sunday, April 01, 2012

தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டு திட்டம் இலங்கை அகதிகளுக்கும் விரிவாக்கம்

தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், இலங்கை அகதிகளுக்கும் விரிவாக்கப்பட உள்ளது. இங்குள்ள 117 முகாம்களில் இலங்கை தமிழர்கள் வசிக்கின்றனர். இவர்களில், குடும்பத் தலைவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இந்தநிலையில் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்தார்.

இதில் உயர்தர சிகிச்சை பெறலாம். இத்திட்டத்தை அகதிகளுக்கும் விரிவாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான புள்ளி விபரங்களை, அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். விரிவாக்கம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

No comments:

Post a Comment