Sunday, May 27, 2012

அமெரிக்கா - கலிபோர்னியாவில் முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது !

முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ,அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் ஆகியோர், இந்நினைவேந்தல் நிகழ்வில் கூட்டாக பங்கெடுத்திருந்தனர்.

United States Tamil Political Action Council அமைப்பின் தலைவர் கலாநிதி எலியஸ் ஜெயராஜ், San Jose நகரசபை உறுப்பினர் Ash Karla ,அமெரிக்க கொங்கிரஸ் சபை பிரதிநிதி Mike Honda's ,ருவண்டா மக்களின் பிரதிநிதி Vincent Mugabo ,ஆர்மேனிய மக்கள் பிரதிநிதி மற்றும் Amnesty International's பிரதிநிதிகள் உட்பட மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், சமூக அமைப்பு பிரதிநிதிகள் என பலரும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment