தமிழீழ விடுதலைப்புலிகள்
இயக்கம் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக இந்திய
மத்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் போராளிகளும், தலைவர்களும் மீள
ஒருங்கிணைய முயற்சிப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதை அடுத்தே,
இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராஜீவ்காந்தி கொலையை அடுத்து 1992ம் ஆண்டு
விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இந்தத் தடை
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் நேற்று
முதல் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு தடையை நீடித்து உள்துறை அமைச்சு
அறிவித்திருக்கின்றது.
No comments:
Post a Comment