Friday, June 01, 2012

சிறிலங்கா கஹவத்த பகுதியில் எரிந்து கருகிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்பு!

சிறிலங்கா கஹவத்த வராப்பிட்டிய பகுதியில்  நேற்றைய தினம் தீயில் எரிந்து  சேதமடைந்த வீட்டிற்குள் இருந்து, எரிந்து கருகிய நிலையில் இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்   தெரிவித்துள்ளார்.

குறித்த வீடு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணை இடம்பெறுவதாக கூறினார்.


இது தொடர்பான விசாரணைகளில் விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment