Friday, June 22, 2012

Karate யில் சாதனை படைக்க காலடி எடுத்துவைக்கும் புலம்பெயர் தமிழீழ சிறுவர்கள்

யேர்மனியில் 6 மாதங்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினரால் பெர்லின் நகரில் Karate மற்றும் தற்பாதுகாப்பு பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது . இவ் பயிற்சி  நிலையத்தில் 20 க்கும் மேலான சிறுவர்கள் வாரம்தோறும் தமது Karate வகுப்புகளை மிக ஆர்வமாக கற்றுக் கொள்கின்றனர் . சென்ற வாரம் ஆரம்ப நிலைக்கான சோதனையில் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்தனர் .




சிறப்பாக இவர்களுக்கான சோதனையை யேர்மன்  கராதே  சங்கம்  (Deutscher Karate Verband e .V . ) ஊடாக  ஆசிரியர் Johannes Köster (5.Dan) மேற்கொண்டதோடு சிறுவர்களின் ஆர்வத்தையும் அத்தோடு சக்திமிக்க அசைவுகளையும் கண்டு தனது பாராட்டுக்களை  தெரிவித்தார் .யேர்மனியில் பிறந்து வளர்ந்தாலும் இச் சிறார்கள் இவ்வாறன வழிகளில் பெருமையுடன் தமது இன அடையாளத்தை பல்லின சமூகத்திற்கு எடுத்துச்செல்வது பாராட்டுக்குரியது .









http://www.shishinodojo.de/
https://plus.google.com/photos/114312385411508419865/albums/5718649801275769809?authkey=CMimmNvu2crydw 
நன்றி

தகவல்
யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு

No comments:

Post a Comment