Thursday, July 19, 2012

உதயன் மீது சி.ஐ.டி. விசாரணை

uthayanஇராணுவத் தளபதியின் கருத்துத் தொடர்பில் கடந்த பதினோராம் திகதி உதயன் பத்திரிகையில் வெளியான செய்திக்காக உதயன் பத்திரிகை ஆசிரியர் கொழும்பில் இருந்து வந்த குற்றத் தடுப்பு புலனாய்வுப் பொலிஸ் பிரிவு அதிகாரிகள் குழுவால் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

செய்தி தொடர்பில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத்ஜெயசூரிய செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்படுவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பிலிருந்து வந்த இரு அதிகாரிகள் அடங்கிய குழு சுமார் மூன்று மணி நேரமாக உதயன் பத்திரிகை ஆசிரியரை யாழ். பொலிஸ் நிலையத்தில் உள்ள குற்றப்புலனாய்வுப் பொலிஸ் பிரிவில் வைத்து விசாரணை நடத்தியது.
ஆசிரியரிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு மேல்நடவடிக்கைகளுக்காக அதனை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment