Tuesday, October 02, 2012

கடற்கரும்புலிகள் மேஜர் அருமை – கப்டன் தணிகை உட்பட்ட 14 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள்

LTTE-Lt-Col-Ilanilasமுல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அருமை, கப்டன் தணிகை உட்பட்ட 5 மாவீரர்களினதும், அம்பாறை மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் காவியமான 9 மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
02.10.1995 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்குகலம் மற்றும் டோறா பீரங்கிப் படகு என்பவற்றின் மீதான தாக்குதலின்போது

கடற்கரும்புலி மேஜர் அருமை
(செல்லத்துரை விஜயானந்தன் – புத்துவெட்டுவான், கிளிநொச்சி)
கடற்கரும்புலி கப்டன் தணிகை
(கணபதிப்பிள்ளை வதனா – யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் இளநிலா
(செல்வராசா அனுராஜினி – இராமநாதபுரம், கிளிநொச்சி)
 கப்டன் சுஜீவன் (யோகராசா)
(இராசரத்தினம் இராஜேந்திரன் – களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு)
 லெப்டினன்ட் அமுதன்
(ஏகாம்பரம் குலசிங்கம் – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)
ஆகியோர் வீரச்சாவைத் தழுவினர்.
இம் மாவீரர்களினதும் இதேநாள் அம்பாறை மாவட்டம் 40ம் கிராமம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய
வீரவேங்கை நாவலன் (பிரபா)
(சின்னத்தம்பி இராசநாயகம் – ஆரையம்பதி, மட்டக்களப்பு)
யாழ். மாவட்டம் அச்சுவேலி, ஆவரங்கால், புத்தூர் மற்றும் நிலாவரைப் பகுதிகளில் முன்னகர்ந்த படையினருடனான மோதல்களின்போது வீரச்சாவைத் தழுவிய
 கப்டன் அன்புராஜ்
(குணம் மேவின் – பெரியகுஞ்சிக்குளம், மன்னார்)
 லெப்டினன்ட் சுசி (முல்லை)
(ஞானசேகரம் தனுசியா – அரியாலை, யாழ்ப்பாணம்)
 லெப்டினன்ட் தமிழன்
(சுப்பிரமணியம் சிவகுமார் – உடுவில், யாழ்ப்பாணம்)
 2ம் லெப்டினன்ட் இசைவாணன்
(இராஜகோபால் விமல்ராஜ் – மட்டக்களப்பு)
 2ம் லெப்டினன்ட் புரட்சி
(வடிவேலு கமலவரதன் – ஊர்வகாவற்றுறை, யாழ்ப்பாணம்)
 2ம் லெப்டினன்ட் பாமகள் (நளினா)
(அப்புத்துரை சத்தியவதனா – ஏழாலை, யாழ்ப்பாணம்)
 வீரவேங்கை அரவிந்தன்
(கணேசக்குருக்கள் ஜெகதீஸ்வரன் – கண்டி, சிறிலங்கா)

வீரவேங்கை கதிரவன் (வரன்)

(கேதீஸ்வரன் சிவகுமார் – தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்)
ஆகிய மாவீரர்களினதும் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்


No comments:

Post a Comment