ஹம்பாந்தோட்டை, மிரிஜ்ஜவில பிரதேசத்தில் ஏற்றுமதி ஒழுங்கமைப்பு வலயமொன்றை நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக 228 ஹெக்டெயார் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வாகனங்களை ஒன்றுதிரட்டுதல், நிர்மாணத்துறைக்கான உற்பத்திகளை வழங்குதல், செயற்திறன் கொண்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் உள்ளிட்ட உற்பத்திக் கைத்தொழில் நடவடிக்கைகள் இந்த வலயத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் விமான நிலையம் உள்ளிட்ட இந்த மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகளை மையமாகக் கொண்டே இந்த வலயம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment