Tuesday, October 02, 2012

நாட்டின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டுமாம்; கோத்தபாய ராஜபக்ச தெரிவிப்பு

df88269d1f433635ba7d680878f27774உலகின் பல நாடுகளில் இலங்கைக்கு எதிராக புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக நாட்டின் பாதுகாப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாட்டின் சகல பகுதிகளிலும் பாரியளவு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவே நாட்டின் பாதுகாப்பை உச்ச மட்டத்தில் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

30 ஆண்டுகால போர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில். உலக நாடுகளில் வாழும் புலிகள் இலங்கையில் அழிவுகளை ஏற்படுத்த தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்கு அரச அதிகாரிகளுக்கு இருக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment