Saturday, October 06, 2012

செந்தூரன் மீண்டும் புழல்சிறையில் அடைப்பு

senthuran-09பூந்தமல்லி சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக் கோரி உண்ணாவிரதம் இருந்த செந்தூரன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
உண்ணாவிரதம் இருந்ததால் உடல் பாதிக்கப்பட்ட அவருக்கு புழல் சிறைச்சாலையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அவரின் உடலில் நீர் சத்து குறைந்துள்ளதாக கூறி கடந்த செப்டம்பர் 29-ந் தேதி மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கடந்த 6 நாட்களாக இங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தூரனின் உடல்நிலை சீரடைந்தது. அதைத் தொடர்ந்து 05.10.2012 அன்று அவர் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

No comments:

Post a Comment