Monday, October 15, 2012

சத்துருக்கொண்டான் பகுதியில் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் ஆயுதங்கள் மீட்பு

sathurukondan_bomp_004மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சத்துருக்கொண்டான் ரயில் தண்டவாளத்துக்கு அருகில் இன்று காலை வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சத்துருக்கொண்டான் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த ஆயுதக்கிடங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் இதனைக்கண்டு சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இது மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆயுதக்கிடங்கை தோண்டி அதில் மறைத்துவைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை செயழிலக்கச்செய்யும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த காலத்தில் விடுதலைப்புலிகள் தங்களது செயற்பாடுகளுக்காக இந்த வெடிபொருட்களை இங்கு மறைத்துவைத்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் அப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டனர். இது தொடர்பிலான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
முன்செல்ல

No comments:

Post a Comment