இலங்கை
நாடானது சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக்
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு
வெளிநாட்டு தலைவர்கள் மிகக் குறைவாகவே விஜயம் செய்கின்றனர். எப்போதாவது
உகண்டா போன்ற ஆபிரிக்க நாட்டுத் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனர்பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை தொடர்பில் சர்வதேச ரீதியில் பேசப்பட்டுள்ளது. இது எமது நாட்டுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையை ஆசியாவின் மற்றுமொரு பர்மாவாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
No comments:
Post a Comment