Tuesday, December 04, 2012

யாழ். பல்கலை மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு கண்டனம்

imageயாழ். பல்கலைகழக மருத்துவ பீட மாணவர் உட்பட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறித்து யாழ். அரச மருத்துவ சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
இதனால் பல்கலைக்கழக மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் மனநிலை பாதிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் எனவும் அச்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் விரைவாகச் செயற்பட்டு கைது செய்யப்பட்ட 4 மாணவர்களையும் உடனே விடுதலை செய்வதன் மூலம், யாழ். பல்கலைக்கழகத்தின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் சுமூகமான நிலைக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் யாழ். அரச மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment