பல்கலைக்கழக
மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான கண்டனப் போராட்டத்திற்கு வவுனியா
வாழ் மக்களையும் தேசிய உணர்வாளர்களையும் பங்குபற்றுமாறு வவுனியா மாவட்ட
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 27,28 ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்களை கண்டித்தும் உதயன் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் எதிர் வரும் செவ்வாய்கிழமை யாழ் பஸ் நிலையத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களையும், பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களையும் கலந்து ஆதரவு வழங்கமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா ஊடக பிரிவு இன்று இந்த அழைப்பினை விடுத்துள்ளது.
கடந்த 27,28 ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற அசம்பாவிதங்களை கண்டித்தும் உதயன் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் எதிர் வரும் செவ்வாய்கிழமை யாழ் பஸ் நிலையத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்பாட்டத்தில் வவுனியா மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசிய உணர்வாளர்களையும், பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர்களையும் கலந்து ஆதரவு வழங்கமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா ஊடக பிரிவு இன்று இந்த அழைப்பினை விடுத்துள்ளது.
இதேவேளை இவர்களது இந்த கண்டன போராட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது முழுமையான ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்கிழமை 11மணி தொடக்கம் 12 மணிவரை யாழ் பஸ் நிலையப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment