கோப்பாய்
பொலிஸாரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த இரண்டு மாணவர்களும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம்
மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கொழும்புக்கு அழைத்துவரப்படுவதாக பொலிஸ்
ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி –
தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.ஸ்ரீடெலோ காரியாலத்தின் மீது பெற்றோல் குண்டு வீசியதாக சந்தேகத்தின் பேரில் மேற்படி இரு மாணவர்களும் கோப்பாய் பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியதன் பின்னரே அவ்விருவரையும் கொழும்புக்கு அழைத்துவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீடெலோ காரியாலயத்தின் மீது கடந்த புதன்கிழமை அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment