
ஈழத்தில் சிறிலங்கா அரசினால் 2009இல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை ஆவணப்படுத்துவதோடு அதை உலகுக்கு ஆதாரங்களோடு எடுத்துரைக்கும் ஆவணப்படமே நோ பயர் சோன் ஆகும். பல உலகநாடுகளிலும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திலும் திரையியடப்பட்டது. சிறி லங்காவிற்கு எதிரான பல நாடுகளின் நிலைப்பாட்டுக்கு பெரிதும் துணை நின்ற ஆவணப்படம். போர்க் குற்றங்களுக்காக சிறி லங்கா சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்பதிலும் ஈழத்தமிழருக்கு ஓர் நீதி கிடைக்க வேண்டும் என்பதிலும் மிக உறுதியோடு செயற்படுபவர் இப் படத்தின் இயக்குனரான இங்கிலாந்தைச் சேர்ந்த திரு கலம் மக்றே அவர்கள்.
ஈழத்தமிழரையும் தமிழ்நாட்டுத் தமிழரையும் புலத்தில் இணைக்கும் பாலமாய் அமையும் பெற்னா தமிழ் விழாவில் அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்றவகையில் இயல் இசை நாடக நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமையும் நிகழ்வுகளில் கனடா மற்றும் அமெரிக்காவில் இருந்து 3500இற்கும் அதிகமான தமிழர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
அனுமதிச் சீட்டுகளுக்கும் கூடிய விளக்கங்களுக்கும் கனடியத் தமிழர் பேரவை.
No comments:
Post a Comment