
அமெரிக்காவின் பொறியியல் வல்லுநர் குழு வடிவமைத்துள்ள இந்த காரை ஓட்டுவதற்கு விமானிகளைப் போல் உரிமம் பெறவேண்டும் என்ற அவசியமில்லையாம்.
இந்தக் கார் மேலெழுந்து பறக்கும்போது, 805 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக்கூடியதாக இருக்கும். கார் மேலெழுந்தவுடன், அதில் மடங்கியிருக்கும் இறக்கைகள் விரிந்து கார் பறக்க உறுதுணையாக இருக்கும். இதை ஓட்டுவோரின் அருகில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இருவகை இயக்கங்கள் கொண்ட இந்தக்காரில் உள்ள என்ஜின் எரிபொருளால் மட்டுமல்ல, கார் ஓடும்போது உற்பத்தியாகும் மின்சாரத்தினாலும் இயங்கக்கூடியது என்று மேற்படி காரை நிர்மாணித்த பொறியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 8 முதல் 12 வருடங்களுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தக் காரில் சென்சார் சாதனங்களும் வழிகாட்டும் கருவியும் இருப்பதால், செயற்கைக்கோள் வழிகாட்டுதல் மூலம் செல்லும் இடத்திற்கு விரைவில் செல்லமுடியும்.
மேலும் செல்லவேண்டிய இடத்தின் தூரத்தைக் கொண்டு, எரிபொருள் கையிருப்பையும் எளிதில் தெரிந்துகொள்ளும் வசதி இதில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்செல்ல
No comments:
Post a Comment