Sunday, June 08, 2014

பருத்தித்துறையில் சமையறை புகைக்கூட்டுக்குள் இரகசிய பதுங்குழி! Top News

யாழ். பருத்தித்துறை பகுதியில் விநாயகர் முதலியார் வீதியில் உள்ள வீடொன்றின் சமயலறையின் புகைக்கூட்டின் கீழ் இரகசியமான முறையில் அமைக்கப்பட்ட பதுங்குகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினருக்கு நேற்று மாலை கிடைத்த தகவலை அடுத்து பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து குறித்த வீட்டில் மேற்கொண்ட சோதனையின் போது 8 அடி ஆழம் 6 அடி அகலமும் கொண்ட பதுங்குகுழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

  
குறித்த வீடு கடந்த 1995ம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் பயன்பாட்டில் இருந்தது. இந்தப் பதுங்கு குழி விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டிருக்கலாம் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அந்தத வீட்டில் தற்போது தங்கியிருப்பவர்கள் வாடகைக்கு குடியிருப்பவர்கள் எனவும் வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் தமது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
  

No comments:

Post a Comment