
இந்த பேட்டிக்கு, தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியது. சுப்பிரமணியன் சுவாமியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக சுப்பிரமணியன் சுவாமியின் கொடும்பாவி எரிப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் மீனவர் படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதிக்கு கூறவே இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளதாவது,
'ஜெயலலிதா திரைத்துறையைச் சேர்ந்தவர். அவர் எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்டைத்தான் படிப்பார். நான் அப்படி எல்லாம் சொல்லவில்லை. நான் மீனவர்கள் நலனுக்காகத்தான் செயல்படுகிறேன். அதனால் பலருக்கு என்னைப் பிடிக்கவில்லை. இராமேஸ்வரம் மீனவர்கள் என்னை சந்தித்து இலங்கை சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவைக் கொண்டு நான் ராஜபக்ஷவிடம் கொடுத்தேன். அதனை ஏற்று மீனவர்களை அவர் விடுவித்தார்.
ஆனால், மீன்பிடி இயந்திரப் படகுகளின் உரிமையாளர்கள், படகுகளை மீட்குமாறு என்னிடம் கோரிக்கை விடுவிக்கவில்லை. மீனவர்கள் பிடிக்கும் இயந்திரப் படகுகளின் உரிமையாளர்கள் டி.ஆர்.பாலு, சசிகலா போன்றவர்கள்தான்' என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், நீங்கள்தான் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு ராஜபக்ஷவிடம் கூறியதாக சொல்லி இருக்கிறீர்களே என்ற கேள்விக்கு, இல்லை... இல்லை... ராஜபக்ஷதான் மீன்பிடி படகுகளை விடுவிக்க முடியாது என சொன்னார் என்று கூறியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.
No comments:
Post a Comment