Tuesday, September 09, 2014

"ஜெ" பினாமி பெயரில் தான் படகுகள் இருக்கிறது: ஆகவே அதனை சிங்கள இரணுவம் பிடிக்கலாம் !

சமீபத்தில் இலங்கை சென்று திரும்பியுள்ள சுப்பிரமணிய சுவாமி, தமிழக மீனவர்களின் படகுகளை கைப்பற்றுமாறு தான் தான் மகிந்தருக்கு அறிவுரை கூறினேன் என்று சொல்லியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் வரும் இந்திய மீனவர்களை கைதுசெய்யும்போது, அவர்களின் படகுகளை இழுத்து வாருங்கள். பின்னர் அவர்களை விடுதலை செய்யுங்கள். ஆனால் படகுகளை திருப்பிக்கொடுக்கவேண்டாம் என்று கோமாளி அரசியல்வாதியும் மகிந்தரின் நெருங்கிய நண்பருமான சுப்பிரமணிய சுவாமி கூறியிருக்கிறார். ஆனால் அவர் அதனை மறுத்துள்ளார். இதேவேளை இவர் மேலும் ஒரு விடையத்தை கூறி அம்மாவின் கடும் கோபத்திற்கு ஆளாகியும் உள்ளார். அது என்ன தெரியுமா ?


பொதுவாக ராமேஸ்வர மீனவர்களின் படகுகள் அவர்களுக்கு சொந்தமானது அல்ல. ஜெயலலிதாவின் நண்பியான சசிகலாவின் பினாமியின் பெயரில் தான் பல படகுகள் இருக்கிறது என்றும், மேலும் முன்னாள் MP ரி.ஆர் பாலுவின் பினாமியின் பெயரில் மேலும் பல படகுகள் ஓடுகிறது. எனவே அவற்றை நீங்கள் தாராளமாக கைப்பற்றலாம் என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதா ஒரு கட்டத்தில் மீனவர் பிரச்சனை குறித்து பேசாமல் அடங்கிவிடுவார் என்றும், அவர் அந்த விடையம் தொடர்பாக ஒருவர் முறை பேசமும், அவரது படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றவேண்டும் என்றும், கோமாளி சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். இச் செய்தியை சில சிங்கள ஊடகங்கள் போட்டு உடைத்துள்ளது.
இச் செய்தி ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ள நிலையில், செல்வி ஜெயலலிதா கடும் ஆத்திரம் அடைந்துள்ளார் என்று சென்னையில் இருந்து வெளியாகும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment