இந்தியாவின்
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு அமைய தமிழகத்தின் முன்னாள்
முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில்
போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துவிட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு அரசாணையாக தமிழக அரசிதழில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ‘லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2) இன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களுர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில்இ இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியையும் இழக்கின்றார்.
தண்டனைக்காலம் மற்றும் அதற்குப் பிந்தைய 6 ஆண்டுகளும் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார்.
இந்த உத்தரவு அவரது விடுதலை தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மாறுபடும்.
எனவே தற்போதைய நிலையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி முதல் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவியுடன் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ பதவியையும் இழந்துவிட்டார். அவரது தகுதியிழப்பு குறித்து முறையான அரசாணை கடந்த 8 ஆம் திகதி தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெயால்லிதா சொத்துக்குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களில் விடுதலை அல்லது தண்டனையில் மாற்றம் இல்லாவிட்டால், தற்போதைய உத்தரவுப்படி ஜெயலலிதா எதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment