Monday, December 15, 2014

யாழ்ப்பாணத்தில் ரஜனிக்கு 4 அடி கேக் செய்த சினிமா பைத்தியங்கள்: வன்னியில் உணவில்லாமல் மக்கள் !

வன்னியில் ஒருவேளை சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக்கொண்டு மக்கள் இருக்கும் இந்தவேளையில், யாழில் சில சினிமா பைத்தியங்கள் ரஜனிக்கு 4 அடியில் கேக் செய்து படைத்துள்ளார்கள். யாழில் 12.12. 2014 அன்று லிங்கா படம் திரையிடப்பட்டது. ரஜனி ரசிகர்கள் இதற்காக சுமார் 4 அடியில் பெரிய கேக் ஒன்றைச் செய்து , ரஜனியின் படத்திற்கு கற்பூர ஆராதனை காட்டி அதனைப் படைத்துள்ளார்கள். ரசிகர்களாக இருக்கலாம். பரவாயில்லை ஆனால் படத்திற்கு பால அபிஷேகம் செய்வது, தேய்ங்காய் உடைப்பது , கற்பூர ஆராதனை காட்டி ஒருவரை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தவேண்டுமா ? அதுதான் புரியவில்லை.
அவர் பெயரைச் சொல்லி நாலு ஏழை மக்களுக்கு உணவைப் போட்டால் அதுபோன்ற ஒரு சந்தோஷம் கிடைக்குமா ?


source:athirvu

No comments:

Post a Comment