குறித்த கப்பல் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. கப்பலை அங்கிருந்து அகற்றி, சர்வதேச கடல் பரப்புக்கு கொண்டுசெல்ல சில அரசியல்வாதிகள் திட்டம் தீட்டியுள்ளார்கள். இருப்பினும் விரைந்து செயல்பட்ட பொலிசார் கப்பலுக்குள் ஏறி மாலுமியை கைதுசெய்துவிட்டார்கள். மேலும் அவர்கள் நடத்திய சோதனையின் போது ஆயுதங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கோட்டபாயவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சிய வியாபார மையம் என்று கூறப்படுகிறது.
இவை அனுமதிபெற்று தான் நடக்கிறதா இல்லை, சட்டவிரோதமான முறையில் நடக்கிறதா என்று தெரியவில்லை. இந்த ஆயுதங்களை யார் கடலில் வைத்து வாங்குகிறார்கள் ? இவற்றால் கிடைக்கும் வருமானம் எங்கே செல்கிறது. மேலும் இந்த ஆயுதங்கள் யாருடையது ? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. விசாரணைகள் தற்போது தொடர்கிறது. மேலும் பரபரப்பான செய்தி வெளியாக உள்ளது. எனவே அதுவரை அதிர்வு இணையத்தோடு இணைந்திருங்கள்.source:athirvu
No comments:
Post a Comment