Tuesday, January 06, 2015

விஸ்வமடுவில் கனகரத்தினத்தை மேடையில் இருந்து இழுத்து வீசிய தமிழ் இளைஞர்கள் !

பொல்லை கொடுத்து பொல்லால் அடி வாங்குவது என்று முதியவர்கள் சொல்வார்களே அது இதுதான் போல இருக்கிறது. நேற்றைய தினம்(04) முல்லைதீவு விசுவமடுப் பகுதியில் நமால் ராஜபக்ஷ ஒரு பிரச்சாரக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். முன் நாள் போராளிகளை அதிகம் கொண்டுவரவேண்டும் என்று அவர் சிங்கள ராணுவத்திற்கு கட்டளை இட்டிருந்தாராம். இதனால் பல தமிழ் இளைஞர்கள் அங்கே கொண்டுவந்து சேர்க்கப்பட்டுள்ளார்கள். இன் நிலையில், பொதுஜன ஜக்கிய முன்னணி சார்பில் மஹிந்தவிற்கு பிரச்சாரம் செய்ய மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை இளைஞர்கள் சேர்ந்து மேடையில் இருந்து இழுத்து விழுத்தியுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

விசுவமடுச் சந்தியில் நாமல்ராஜபக்ஸவினது ஏற்பாட்டில் இன்றிரவு இப்பிரச்சாரக் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. கண்ணன் என்பவர் தலைமையில் இசைக்குழுவொன்று இசை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்த நிலையில் மஹிந்தவிற்கு ஆதரவாகப்பிரச்சாரம் செய்யவென மேடையேறிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய சுதந்திரக்கட்சி பிரமுகருமான கனகரத்தினத்தை அங்கு நின்றிருந்த இளைஞர்கள் சிலர் அவரை பேசவிடாது மேடையிலிருந்து இழுத்து வீழ்த்தியுள்ளனர்.
அண்மையிலேயே கனகரத்தினம் முல்லைதீவு மாவட்ட சுதந்திரக்கட்சி(மகிந்தரின் கட்சி) அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மகிந்தரை வீழ்த்தவேண்டும் என்று முன் நாள் புலிகள் உறுப்பினர்கள் கூட குறியாக உள்ளார்கள். ஆனால் சில தமிழர்கள் தான் இன்னும் திருந்தவே இல்லை. உணர்ச்சி ஆரசியல் நடத்திவருகிறார்கள்.
source:athirvu

No comments:

Post a Comment