Thursday, February 12, 2015

சென்னையில் ஐநா அலுவலகம் முற்றுகை

ஒடுக்கப்பட்ட அனைத்து தேசிய இனத்திற்காகவும் ஐநா முன்றலில் தீக்குளித்து இறந்த முருகதாசன் நினைவு நாளான இன்று  சென்னை அடையாரில் உள்ள ஐநா யுனிசெப் பணிமனை முன்பாக    பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடை பெற்றது. இவ் போராட்டத்தை மே17 இயக்கத்தினர் ஒழுங்கு செய்தனர்.
 
*  ஐநா உறுதி செய்துள்ள பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையை அமுல்படுத்து.

*  தமிழீழ பகுதியை தன்னாட்சி பிரேதேசமாக உடனே அறிவி.பதிவு இணையதள செய்தி

*  பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை இடைக்கால நிர்வாக சபையை அமை.

*  தமிழீழத்திலிருந்து சிங்கள இராணுவத்தை உடனடியாக வெளியேற்று.

 
முருகதாசன் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிணைவோம்!!
 வீரவணக்கம் வீரவணக்கம், முருகதாசனுக்கு வீரவணக்கம்..

இனவழிப்பில் பங்கெடுத்த ஐநாவைக் கண்டித்து வீரச்சாவடைந்த, முருகதாசனுக்கு வீரவணக்கம்..

ஐநா மன்றமே அயோக்கிய மன்றமே பொதுவாக்கெடுப்பு நடத்து,
தமிழீழ விடுதலைக்காக உடனே பொதுவாக்கெடுப்பு நடத்து..
பதிவு இணையதள செய்தி 
ஐநா அவையே பிரிந்துசெல்லும் சுயநிர்ணய உரிமையை,
தமிழீழத்தில் அமுல்படுத்து..

தமிழீழப் பகுதியை தன்னாட்சிப் பகுதியாக உடனடியாக அறிவித்திடு..

என்றவாறு முழக்கங்கள் எழுப்பட்டு போராட்டம் நடை பெற்றது.
source:pathivu

No comments:

Post a Comment