Wednesday, March 11, 2015

இதுநம்தேசத்திற்கு அச்சுறுத்தல்! விநியோகத்தர்களிற்கு கொலை மிரட்டல்!!

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் இதுநம்தேசம் பத்திரிகை விநியோகஸ்தர்களிற்கு மீண்டும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் சிவநகர் பகுதியில் நேற்றய தினம் குறித்த பத்திரிகையினை விற்பனை செய்து கொண்டிருந்தபோது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த மூவர் குறித்த பத்திரிகையினை பலாத்காரமாகப்பெற்று வீசியதாகவும் அத்துடன் விநியோகஸ்தரை இனிமேல் விற்பனைக்கு பத்திரிகையினை எடுத்து வந்தால் சேர்த்து தீவைத்து எரிக்கப்போவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.
தேர்தலிற்கு முன்னரும் இராணுவத்தினரால் நேரடியாக இவ்வாறு விநியோகஸ்தர்களிற்கு மிரட்டல்விடுக்கப்பட்டிருந்ததுடன் வர்த்தக நிலையங்களினில் காட்சிப்படுத்தவோ விற்பனை செய்யவோ கூடாதென எச்சரிக்கப்பட்டுமிருந்தனர்.

இது தொடர்பில் பத்திரிகை ஆசிரிய பீடம் சர்வதேச மற்றும் உள்ளுர் ஊடக செயற்பாட்டு அமைப்புக்களது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தது.
தற்போதைய ஆட்சி மாற்றத்தின் பின்னராக வடக்கில் மீண்டும் துளிர்விட்டுவரும் கெடுபிடிகளது தொடர்ச்சியாகவே மீண்டும் விநியோகப்பணிக்கான முட்டுக்கட்டை போடப்படுவதாக ஆசிரியபீடம் கருத்து வெளியிட்டுள்ளது.
யாழிலிருந்து வார இதழாக வெளிவரும் இதுநம் தேசம் அரசியல் மற்றும் பல்துறை சார்ந்த சஞ்சிகையென்பது குறிப்பிடத்தக்கது.source:pathivu

No comments:

Post a Comment