Tuesday, March 10, 2015

லண்டனில் மைத்திரி ,ரணில் ,சரத்பொன்சேகா படங்களை போட்டு காலால் மிதித்த தமிழர்கள் !


லண்டனில் நேற்று திங்கட்கிழமை நடந்த பாரிய ஆர்பாட்டத்தில் , பல நூறு தமிழர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். பிரித்தானியாவில் மக்கள் செல்வாக்கு அதிகம் மிக்க அமைப்பான TCC இதனை ஒழுங்கு செய்தது. மைத்திரி தற்சமயம் லண்டனில் தங்கி உள்ளார். அவர் நேற்றைய தினம் , காமன்வெலத் அலுவலகம் சென்றவேளை அதற்கு முன்னால் கூடிய பல நூறு தமிழர்கள் , இனப் பிரச்சனையை சீக்கிரம் முடிவுக்கு கொண்டுவரவேண்டும் , தமிழ் ஈழம் என்பது இறைமையுள்ள ஒரு தேசம் , போர்குற்ற விசாரணை நடைபெறவேண்டும் என்று கோரி பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் கைகளில் தேசிய கொடியான புலிக்கொடியை தாங்கி நின்றார்கள்.

எதிரே உள்ள அலுவலகத்தில் நின்று பார்த்தால் , வெளியே என்ன நடக்கிறது என்பதும் மிகவும் தெளிவாகத் தெரியும். இன் நிலையில் தான் இந்த பாரிய ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. மைத்திரிபால சிறிசேனா , லண்டன் அலுவலகத்திற்கு உள்ளே இருந்து வெளியே நடப்பதை பார்த்தும் உள்ளார் என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை சரத்பொன்சேகா , ரணில் , மற்றும் மைத்திரியின் படங்களை தமிழ் இளைஞர்கள் காலால் மிதித்துள்ளார்கள்.

[ Mar 10, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 7425 ] source:athirvu

No comments:

Post a Comment