Tuesday, June 02, 2015

நெதர்லாந்தில் தேசியநாள் வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி


நெதர்லாந்தில் தேசியநாள் வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி 2015 நேற்று 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை மத்திய நெதர்லாந்தின் ZEIST என்னுமிடத்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது.
கேணல் சங்கர்  (சத்தியநான்)அண்ணாவின் நினைவுவணக்கத்துடன் காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு,  ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. 
சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம், சீரற்ர காலநிலையிலும்   வெகு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இருந்தாலும் பலநூற்றுக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு மிக மகிழ்ச்சியாக  பங்கேற்றனர் .
குறிப்பாக நெதர்லாந்தில் முதல்முறையாக சிறுவர்களுக்கன தேசிய நாள் உதைபந்தாட்டம் ஈழத்தம்ழர் விளையாட்டு ஒனறியத்தால் நடாத்தபட்டமையால் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன காணப்பட்டனர். பின்னர் வெற்றியீட்டிய  கழகங்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு மாலை 8.00 மணியளவில் தேசியக்கொடியிறக்கப்பட்டு எங்கள் தமிழ்  உறவுகளின் கை தட்டலுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவெய்தியது.
வெற்றியீட்டிய கழகங்கள்

15வயதிகுட்பட்டோர்.

1ம் இடம் YMTA OUDENBOSCH
2ம் இடம் T.F.C SCHAGEN
3ம் இடம் இளம்பூக்கள் DENBOSCH

வளர்ந்தோர்களுக்கன உதைபந்தட்டம்

1ம் இடம் DENHELDER
2ம் இடம்  YMTA OUDENBOSCH
3ம இடம் T.F.C SCHAGEN

No comments:

Post a Comment