25 வது நாளில் தொடரும் நடைப்பயணத்தில் பெல்ஜியம் நாட்டவர்களும் இணைந்துள்ளமை புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி சுவிஸ் ஜெனீவா ஐ..நா சபை முன்றலில் 28.08.2010 அன்று ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய நடைப்பயணம் சுவிஸ் ஈழத்தமிழரவையோடு அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டு புறுசெல்ஸ் ஐரோப்பிய ஒன்றியத்தை சென்றடைய இன்னும் 75 கி.மீ தூரம் மட்டுமே உள்ள நிலையில் இன்று (22.09.2010) 25வது நாளில் அனைத்துலக தமிழ் மக்களின் பேராதரவோடு பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக தொடரப்பட்டு வருகிறது.
மனிதநேய கோரிக்கைகளை முன்வைத்து திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்களும் மேற்கொண்டுவரும் நடைப்பயணத்தில் நேற்று எமது மக்களோடு தமிழரல்லாத பெல்ஜியம் நாட்டவர்களும் இணைந்துள்ளமையும், பெல்ஜிய காவல்துறையினர் மலர்ச்செண்டு கொடுத்து சந்தித்து கலந்துரையாடியதும் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் இலங்கையிலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் பலர் தொடர்புகொண்டு உணர்ச்சிபொங்க வாழ்த்துச்செய்திகளை தெரிவித்தமை தமக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியதாக தெரிவித்ததோடு தமிழ்நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடைபயணத்தில் பங்குபற்றிய தமிழ் தேசிய உணர்வாளர்களுடன் பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
எமது மக்களின் சுதந்திரமான வாழ்வுக்கும், உரிமைக்குமான இவ்வாறான போராட்டங்கள் பெல்ஜியத்தோடு நின்றுவிடாது உலகில் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவர்களின் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும் எதிர்காலத்தில் தொடர்ச்சியான ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கும் பல தமிழ் அமைப்புகளும் தனி நபர்களும் முன்வந்துள்ளனர். இவ்வாறான முன்னெடுப்புக்கள் பற்றிய விபரங்கள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.
தியாக தீபம் திலீபனின் 23ஆம் ஆண்டு நினைவுதினமான இம்மாதம் 26ஆம் நாள் புறுசெல்ஸ் நகரை சென்றடையும் இவர்கள் மறுநாள் 27.09.2010 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றிய வளாகத்தில் நடைபெறவுள்ள ‘எழுவாய் தமிழா நெருப்பாய்’ எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்துகொள்வதுடன் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் மனிதநேயக் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றினையும் கையளிக்கவுள்ளனர்.
இந்த மாபெரும் எழுச்சி கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொண்டு எமது உரிமைக்காக குரல்கொடுக்க அனைத்துலக தமிழ் உறவுகளையும் உணர்வோடு அணிதிரள அழைக்கின்றோம்.
அனைத்து நாட்டு நகரங்களிலும் போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. உங்கள் பகுதி தொடர்பாளர்களுடன் தொடர்புகொண்டு விபரங்களை பெற்றுக்கொள்வதோடு உங்கள் அறிந்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
மேலதிக விபரங்களுக்கு: 0041795949517
போக்குவரத்து விபரங்களுக்கான தொடர்புகளுக்கு:
சுவிஸ் ஈழத்தமிழர் அவை: 0799518522
தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்: 0658589290
சம உரிமைக்கான தமிழ்ர் மையம் ஜேர்மனி: 01732762766
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை: 03272921804
நோர்வே ஈழ்த்தமிழர் அவை: 045477983
பிரித்தானியா: 07403154084
டென்மார்க் தமிழர் பேரவை: 52173671
தமிழர் பண்பாட்டுக்கழகம் பெல்ஜியம் 0493885930
தமிழீழ மக்கள் பேரவை பிரான்ஸ்: 0658589290
சம உரிமைக்கான தமிழ்ர் மையம் ஜேர்மனி: 01732762766
இத்தாலி ஈழத்தமிழர் மக்களவை: 03272921804
நோர்வே ஈழ்த்தமிழர் அவை: 045477983
பிரித்தானியா: 07403154084
டென்மார்க் தமிழர் பேரவை: 52173671
தமிழர் பண்பாட்டுக்கழகம் பெல்ஜியம் 0493885930
No comments:
Post a Comment