சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியில் பத்து தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதுச் சிறுமியை பொலிஸார் மீட்டதுடன் அவரைக் கடத்திச் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர். இந்தச் சிறுமி காணாமற்போனது தொடர்பாக அவரது பெற்றோரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பத்து தினங்களின் பின்னர் அவர் மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. நுணாவில் மேற்கைச் சேர்ந்த நபரையும் மீட்கப்பட்ட சிறுமியையும் பொலிஸார் நேற்றுமுன்தினம் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிவான் மா. கணேசராஜா இந்த நபரை ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சிறுமியை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.
No comments:
Post a Comment