
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பற்றிக் குறிப்பிடும்போது, அவர் ராஜிவ்காந்தி மீது வைத்திருந்த வெறுப்புக்கு, தி.மு.க.வும் மறைமுகமாக ஒரு காரணம் என்று கே. பத்மநாதன் (கே.பி.) சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இதுபற்றி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தனது கருத்தைக் கூறியிருந்தார். இந்த நிலையில், கே.பி.யின் கூற்றுப்பற்றி முன்னாள் முதல்வர் கலைஞரிடம் நிருபர் ஒருவர் கருத்துக் கேட்டபோது, கே.பி. என்பவர் யாரென்றே தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார். கே.பி.யா? அவரின் பெயரை நான் கேள்விப்பட்டதேயில்லை. ராஜிவ்காந்தி கொலை பற்றி அவர் என்ன சொன்னார் என்பதும் எனக்குத் தெரியாது� என்று அப்பாவியாகக் கேட்டிருக்கிறார் கலைஞர் கருணாநிதி.
போதாக்குறைக்கு அருகில் இருந்த தனது பிரத்தியேகச் செயலாளரிடம் இதுபற்றி முணுமுணுத்துள்ளார். இவர் கேட்டது கே.பி என்றால் கே.பி சுந்தராம்பாளா என்றா என்று அரசல் புரசலாக கதைகள் தற்போது வெளியாகியுள்ளது. இவர் எல்லாம் தமிழ் நாடு முதல்வராக இருந்து.... வேணாம் சொல்லவே தேவையில்லை !
No comments:
Post a Comment