Saturday, February 18, 2012

சிட்னி மைதானத்தில் பறந்த புலிக்கொடி


சிட்னியில் இன்று நடைபெற்ற அவுஸ்ரேலிய – சிறிலங்கா அணிகளுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டியின் போது புலிக்கொடி பறக்க விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிட்னி மைதானத்தில் இன்று மாலை அவுஸ்ரேலிய அணிக்கு எதிராக சிறிலங்கா அணி ஆடிக் கொண்டிருந்த போது பார்வையாளர் ஒருவர் புலிக்கொடியை ஏந்தி உயர்த்தியபடி இருந்தார்.

சிறிலங்கா அணியின் ஆதரவாளர்கள் மத்தியில் புலிக்கொடி பறப்பதை அவதானித்த அவுஸ்ரேலிய காவல்துறையினர் உடனடியாகச் சென்று அந்தக் கொடியைப் பறித்தெடுத்தனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புலிக்கொடியுடன் ஒருவர் மைதானத்தில் நுழைந்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment