Saturday, February 18, 2012

சிறிலங்கா ஆயுதப்போராட்டத்தின் பின்னணி குறித்து தமிழ்நாட்டில் தகவல் திரட்டும் அமெரிக்கா


சிறிலங்காவில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தமிழ்நாட்டில் நடத்தி வரும் ஆய்வு தொடர்பாக சிறிலங்கா அரசு கடும் விசனத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காவில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அதன் வரலாறு, தமிழகத்திலுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு என்பன குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்து வருகிறது.
இதற்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள், கட்சிகளின் தலைவர்களிடம் அமெரிக்க தூதரகம் விபரங்களைக் கோரியிருக்கிறது.
ஜெனிவாவில் மனிதஉரிமைகள் தொடர்பான மாநாடு நெருங்கும் நேரத்தில் இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த ஆய்வை மேற்கொண்டிருப்பது குறித்து சிறிலங்கா அரசு கடும் அதிர்ச்சிக்கும் விசனத்திற்கும் உள்ளாகியிருப்பதாக சிறிலங்கா அரசதரப்பு தகவல்கள் தெரிவித்தன.

சிறிலங்கா பிரச்சினை தொடர்பான முக்கிய பல தகவல்களை தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள் அங்கிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment