Sunday, February 26, 2012

பிரதமர் மீது வழக்கு தொடருவேன்: உதயகுமார்

  கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை கொச்சைபடுத்தும் விதத்தில் பேசியுள்ள பிரதமர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூடங்குளம் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், போராட்டக் குழுவினருக்கு அமெரிக்காவில் இருந்து பணம் வருவதாகவும், அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை சிந்திக்கும் திறன் அற்றவர்கள் என்ற அர்த்தத்திலும் பிரதமர் மன்மோகன் சிங் கொச்சை படுத்தும் விதத்தில் பேசியுள்ளார்.

மேலும், எனக்கு சுவீடன் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்பு இருப்பதாக மத்திய அமைச்சர் நாராயணசாமியும், போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக அமெரிக்காவில் நான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுபோன்று உண்மைக்குப் புறம்பாக எனக்கு எதிராகவும், போராடும் மக்களை அவதூறாகவும் பேசியுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர் நாராயணசாமி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் மீது வழக்கு தொடர உள்ளதாக கூறியுள்ளார்.

No comments:

Post a Comment