Friday, March 02, 2012

பேஸ்புக்மூலம் இலங்கைத் தமிழ்பெண்ணை மோசடிசெய்த மதுரை வீரன்!


தமிழ்நாடு மதுரை ஆவனியாபுரத்தினை சேர்ந்த சிவகுமார் என்பவர் இலங்கை தமிழ்பெண்ணான 35 அகவையுடைய சறோஜினிதேவியை பேஸ்புக் மூலம் காதலிப்பதாக நடித்து ஏமாற்றி மோசடி செய்த சம்பவம் அம்பலமாகியிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பேஸ்புக் மூலம் அறிமுகமானதன் பின்னர் சறோஜினிதேவியை காதாலிப்பது போன்று நடித்த சிவகுமார் சறோஜினிதேவியை மதுரைக்கு வருமாறும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் மதுரை கூடல் அழகப்பொருமாள் கோவிலில் 10.12.2011 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் தொழில் செய்து பணம் சம்பாதிக்க சிங்கப்பூர் சென்று குடியேறியுள்ளனர்.

அங்கு சறோஜினியின் முக்கியமான பெறுமதியான பொருட்கள் விசாஅட்டைகள் மடிகணணிகள் என்பனவற்றை களவாடிக்கொண்டு சிவகுமார் தலைமறைவாகியுள்ளதாகவும் பின்னர் போலி பெயர்களில் பேஸ்புக்கில் வந்த சிவகுமார் சறோஜினியின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் வெளியிட்டு மிரட்டல் விடுத்துள்ளார் குறித்த ஏமாற்றச்சம்பவம் குறித்து மதுரை காவல்துறையில் சறோஜினி முறைப்பாடு செய்துள்ளதை தொடர்ந்து இதுதொடர்பான விசாரணைகள் இடம் பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment