Saturday, March 03, 2012

சிறீலங்காவிற்கு அவகாசம் வழங்கவேண்டும்-சீனா,பாக்கிஸ்தான் வலியுறுத்தல்.

சிறீலங்காவில் நல்லிணக்க செயன்முறையினை முன்னெடுத்துசெல்ல சிறீலங்காவிற்கு காலஅவகாசம் வழங்கவேண்டும் என்று
ஜெனீவாமனிதஉரிமை கூட்டத்தொடரில் சீனாவும் பாக்கிஸ்தானும் வலியுறுத்தியுள்ளன.

மேற்கைத்தேய சக்திகளால் சிறீலங்காவிற்கு அழுத்தம்கொடுக்காமல் நல்லிணக்க செயன்முறையினை முன்னெடுத்து செல்வதற்கு காலஅவகாசம் தேவைஇதேவேளை தேசிய நல்லிணக்க செயன்முறையை முன்னேற்றுவதற்கு சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சீனா அரசாங்கம் பாராட்டுவதாக சீன தூதுவர் லியூஹென்மின் தெரிவித்துள்ளார்.சிறீலங்காவின் இணக்கப்பாட்டுடனேயே பன்னாட்டு உதவிகள் வழங்கப்படவேண்டும்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சிறீலங்கா அரசு உஉண்மையான நல்லிணக்க பொறிமுறையினை செயற்படுத்துவதற்கு நேரமும் இடமும் வழங்கப்படவேண்டும் என்று பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது.நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஜெனீவா மனிதஉரிமைகள்கூட்டத்தொடரில் தென்னாபிரிக்கா தாய்லாந்து பொட்ஸ்வானா இந்தோனேஷியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இலங்கையின் நல்லிணக்க செயன்முறை குறித்து இலங்கைக்கு சாதகமான கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

No comments:

Post a Comment