Monday, March 19, 2012

ஐ.நா., சபையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட உள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகமெங்கும் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை அரசுக்கு சாதகமாகவும், இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகவும் நடந்துகொள்வதாக மத்திய அரசின் மீது குற்றம் சாட்டி, நெல்லை, தஞ்சாவூர், மதுரை உட்பட அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் கோஷங்கள் எழுப்பினர். தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், போராட்டம் வலுப்பெறும் என்றும் தெரிவித்தனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, அரியலூர் மாவட்டம் கீழப்பளூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது

No comments:

Post a Comment