
26 பக்கங்கள் கொண்ட அந்த கோரிக்கை மனுவை பிரதமரின் சிறப்பு அதிகாரி டத்தோ படுக்கா கஜாலி இப்ராகிம்
பெற்றுக்கொண்டதாகவும் அதனை திங்கட்கிழமை பிரதமரின் கவனதிற்கு கொண்டு செல்லவிருப்பதாக இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற கா. ஆறுமுகம் தெரிவித்தார்.
ஜெனீவாவில் நடக்கவிருக்கும் 19-வது ஐ.நா மனித உரிமை மன்றத்தின் சந்திப்பில் இலங்கை அரசிற்கு எதிராக கொண்டுவரவிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக மலேசிய அரசை வாக்களிக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனு வலியுறுத்துகிறது.

அந்த மனுவில், 2009-ஆம் ஆண்டின் கடைசி போர் நடந்த மாதங்களின் இறுதியில் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்த்தப்பட்ட அனைத்துலக மனித உரிமை சட்டம் மற்றும் மனிதநேயச் சட்ட மீறல்களுக்கு இலங்கை பொறுப்பேற்க அந்நாட்டை வலியுறுத்துதியது.
அதில், 2010-ல் வெளியிடப்பட்ட ஸ்ரீலங்கா பிரச்சனையின் கற்றுக் கொண்ட மற்றும் ஒத்திசைவு ஆணையத்தின்(LLRC) அறிக்கையையும், ஐ.நா பொது செயலாளரின் சிறப்பு நிபுணர் குழு(PoE) அறிக்கையையும் விவாதத்திற்குக் கொண்டுவருவதோடு போரில் அனைத்து நிலைகளின் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களையும் மனிதநேய சட்ட மீறல்களையும் விசாரணைக் கொண்டுவர வலியுறுத்துவதுதோடு, இலங்கை அரசை போர் குற்றங்கள், மனிதநேயத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் இனப்படுகொலைகளை சார்பாக விசாரிக்க அனைத்துலக சுயேச்சை அமைப்பை நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டது.

“எங்கள் தரப்பு நியாயங்களை பின்வரும் அறிக்கைகளின் துணைக் கொண்டு முன்வைக்கிறோம்” என்று, ஐ.நா பொது செயலாளரின் சிறப்பு நிபுணர் குழு அறிக்கை (PoE); அந்த அறிக்கை சார்புடைய அனைத்துலக அரசு சார்பற்ற இயக்கங்களின் கருத்துகள்; இலங்கை ‘கொலைக் களங்கள்’ Channel 4-வின் ஆவணப்படம் சார்புடைய கருத்து மற்றும் கற்றுக் கொண்ட மற்றும் ஒத்திசைவு ஆணையத்தின்(LLRC) அறிக்கையை ஒட்டிய வரலாறு மற்றும் முடிவுகளும், அந்த மனுவில் இணைக்கப்பட்டிருந்தது.
“மனுவில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பிரதமர் 2009-ல் மலேசியா எடுத்த முடிவை காட்டிலும் சிறப்பான முடிவைக் எடுக்க உதவும்” என நம்புவதாக கா. ஆறுமுகம் தெரிவித்தார். இன்றைய நிலையில் மலேசியா அரசிடம் கொண்டுள்ள இந்த எதிர்பார்ப்பு மிகவும் எளியது என்றவர், மாலேசியா இதில் சோரம் போனால் அது இனவாத முடிவாகவே அமையும் என்பதால், இது இந்நாட்டில் வாழும் சிறுபான்மை இனங்களுக்கு பலத்த பின்விளைவுகளை உண்டாக்கும் என கோடிகாட்டினார்.
No comments:
Post a Comment