ஈழத்தமிழர்களுக்கு
தனிஈழத்தை உருவாக்கி விட்டுத் தான் உயிர்துறப்பேன் என்று திமுக தலைவர்
மு.கருணாநிதி சென்னையில் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்
சூளுரைத்துள்ளார்.
வடசென்னை தி.மு.க சார்பில் பெரவள்ளூரில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“அண்ணா, காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்கப் போராடுவேன்.
தனி ஈழம் அமைப்பதற்கு, 1980களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.
அந்த இயக்கம், தி.மு.க.வின் துணை இயக்கமாகச் செயலாற்றி தனித் தமிழீழம் உருவாகப் பாடுபடும்.
தந்தை செல்வாவின் வழியில் – வன்முறையற்ற வழியில் அமைதியிலான போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும்.
சிறிலங்கா அதிபர் இதனை நிராகரிக்கலாம்.
ஆனால் இது தான் எனது எஞ்சிய வாழ்நாளின் இலட்சியம்.
தனித் தமிழீழத்தை உருவாக்கி விட்டு தான் நான் இவ்வுலகை விட்டுச் செல்வேன்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
source: Sankathi on April 26th, 2012
வடசென்னை தி.மு.க சார்பில் பெரவள்ளூரில் நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
“அண்ணா, காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்கப் போராடுவேன்.
தனி ஈழம் அமைப்பதற்கு, 1980களில் உருவாக்கப்பட்ட டெசோ எனப்படும் தமிழீழ ஆதரவாளர்கள் இயக்கத்தை மீண்டும் தொடங்க வேண்டும்.
அந்த இயக்கம், தி.மு.க.வின் துணை இயக்கமாகச் செயலாற்றி தனித் தமிழீழம் உருவாகப் பாடுபடும்.
தந்தை செல்வாவின் வழியில் – வன்முறையற்ற வழியில் அமைதியிலான போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும்.
சிறிலங்கா அதிபர் இதனை நிராகரிக்கலாம்.
ஆனால் இது தான் எனது எஞ்சிய வாழ்நாளின் இலட்சியம்.
தனித் தமிழீழத்தை உருவாக்கி விட்டு தான் நான் இவ்வுலகை விட்டுச் செல்வேன்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
source: Sankathi on April 26th, 2012
No comments:
Post a Comment