Tuesday, May 29, 2012

பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் “உண்மையின் சாட்சியங்கள்” நிழற்படக் கண்காட்சி

அன்பானவர்களே! இலங்கை அரசு, சனநாயகம் என்ற போர்வையில் பாரிய பயங்கரவாத அத்துமீறல்களை தமிழ் மக்கள் மீது மேற்கொண்டுள்ளது.
Photo-Exhibition-1தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்தல், தமிழரின் தாய்மொழி உரிமையினைத் தடைசெய்தல், அவர்களின் கலை, கலாச்சார விழுமியங்களை அழித்தல், தமிழ் சிறுமிகளைப் பாலியல் பலாத் காரம் செய்து, படுகொலை செய்தல், தமிழ் மக்களின் சொத்துக்களை அழித்தல், எந்தவித விசாரணையும் இல்லாமல் தமிழ் மக்களை சிறைகளிலும் சித்திரவதை முகாங்களிலும் அடைத்துச் சித்திரவதை செய்தல், தமிழ் மக்களை தங்கள் சொந்த இடங்களுக்குச் செல்லவிடாமல், அகதி முகாங்களில் நீண்ட காலமாக அடைத்து வைத்தல், மக்களைச் சுதந்திரமாக நடமாடவிடாமல் இராணுவக் கெடுபிடிக்குள் வைத்திருத்தல் நேரடியாகவும், தடைசெய்யப்பட்ட இராசயனக் குண்டுகள்
மூலமாகவும் பெருந்தொகை தமிழ் மக்களைப் படுகொலை செய்தது, ஆகியவைகள் இலங்கை அரச பயங்கரவாத அத்துமீறலின் கோரமுகத்;தை வெளிக் காட்டுவனவாக அமைந்துள்ளன. இவற்றுக்கான சாட்சியங்;களாக நிழற்படக் கண்காட்சி நடைபெறுகிறது.
அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம்
அனுமதி இலவசம்ய
தொடர்புகளுக்கு:
017636106771, 015210615996

No comments:

Post a Comment