Thursday, June 21, 2012

பிரித்தானியாவில் தமிழர் தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டும் விழிப்புணர்வு ஒன்றுகூடல் !


uk-prayerஇலங்கைத் தீவில், தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக மதரீதியாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களை கண்டித்து, பிரித்தானியாவில் சர்வமத விழிப்புணர்வு ஒன்றுகூடலொன்று இடம்பெறவுள்ளது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீதான அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், சிறிலங்காவின் சிறைகளில் உள்ள தமிழர் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும், தமிழர் தாயகத்தில் சாத்வீகவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தொடர்ந்து  நில அபகரிப்புக்கு எதிரான சாத்வீகவழி மக்கள் போராட்டங்களும் தமிழர் தாயகத்தில் துளிர்விடத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில், தாயக மக்களது சாத்வீக்வழிப் போராட்டங்களுக்கு வலுவூட்டவும், அப்போராட்டத்தின் நியாப்பாட்டினை வெளியுலகிற்கு கொண்டு செல்லும் நோக்கில், பிரித்தானியாவில் இந்த விழிப்புணர்வுப் ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உதவிப் பிரதமர் உருத்திராபி சேகர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
யூன் 21ம் நாள் வியாழக்கிழமை மாலை  6:00 – 7:00 வரை ஒருங்கிணைவாகவும், தொடர்ந்து 7:00 – 8:45 வரை மத வழிபாட்டுடன்கூடிய விழிப்புணர்வுக் கூட்டமும், Trinity Centre, East Avenue, Eastham, London E12 6SG குறித்த இந்த முகவரியில் இடம்பெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்திற்கு சகல இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் இந்து மத அமைப்புக்களின் பிரதிநிதிகளையும், மதகுருமார்களையும் சமூகமளிக்குமாறு , உரிமையோடு அழைத்துள் கொள்வதாக தெரிவித்துள்ள உதவிப் பிரதமர் உருத்திராபதி சேகர் அவர்கள் தாயக மக்களுடன் எமக்குள்ள தோழமையுணர்வினை தெரிவிக்கும் நோக்குடன் அனைத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்களையும் மற்றும் தமிழர் அமைப்புக்களையும் பங்கெடுக்குமாறு கோரியுள்ளார்.

No comments:

Post a Comment