
தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும், நிலப்பறிப்பு நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். சிறிலங்கா சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அரசியற் கைதிகளான போராளிகளை விடுதலை செய்யவேண்டும்.
மேற்கு நாடுகளில் அகதி தஞ்சம் கோருபவர்களை திருப்பி அனுப்ப வேண்டாம் என ஐந்து அம்சக் கோரிக்கைகளை சர்வதேச சமூகத்தின் முன்வைத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னெடுத்துவருகிறார்.
இன்றைய தினம் திரு. சிவந்தனுக்கு ஆதரவாக லண்டனின் புறநகர்ப்பகுதியான ஹரோவைச் சேரந்த திரு. குணா அவர்கள் ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்தினார்.
திரு.சிவந்தன் உண்ணாநிலைப் போராட்டத்தை நடாத்தி வரும் பந்தலுக்கு அருகிலும், ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகிலும் அவரது கோரிக்கைகளடங்கிய துண்டுப்பிரசுரங்களை பெருமளவில் தமிழ் இளையவர்களால் விநியோகிக்கப்பட்டது.
திரு. சிவந்தனை நேரில் வந்து சந்திக்க வசதியில்லாதவர்களும், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் அவருடன் sivanthan27@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்புகொண்டு உங்கள் ஆதரவினை வெளிப்படுத்த முடியும்.
No comments:
Post a Comment