இனவழிப்புக்கு உள்ளாகி வரும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் போதிய கவனத்தை செலுத்தவில்லை.
ஒரு சில ஊடகங்களைத் தவிர மற்றயவை இவ்விடயம் பற்றி அக்கறை காட்டுவதில்லை என்பதனால் மக்கள் மத்தியில் செய்திகள் சென்றடைவதில்லை.
ஆதலால் அனைத்துலக மக்களின் கவனத்தை ஈர்க்கவே நான் போராடுகிறேன் இவ்வாறு இன்று பதினேழாவது நாளாக உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி Voice of America இன் ஊடகவியலாளருக்குத் தெரிவித்துள்ளார்.
இன்று மத்திய லண்டன் பகுதிகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றமையால் போக்குவரத்து நெரிசல்கள் அதிகரித்துக் காணப்பட்டபோதிலும் பெருமளவு மக்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் ஸ்ரற்போர்ட் நெடுஞ்சாலை இலகு தொடருந்து நிலைய (Stratford High Street DLR) அருகாமையில் திரண்டிருந்தனர்.

No comments:
Post a Comment