Thursday, October 04, 2012

பிரித்தானிய புலம்பெயர் இளைஞர்கள் இலங்கை வருகை

uk_001பிரித்தானியாவில் உள்ள இலங்கை புலம்பெயர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று அண்மையில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் ஆறு பேரை கொண்ட குழு இவ்வாறு இலங்கை வந்திருப்பதாக, கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த குழு, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் கலந்துக் கொண்டதுடன், யுத்த பிரதேசங்களுக்கும் சென்று பார்வையிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவின் இலங்கை விஜயம், இலங்கையின் உண்மையான நடப்பு சூழ்நிலைகள் குறித்து புலம்பெயர்ந்த மக்கள் அறிந்துக் கொள்வதற்கு வழி செய்திருப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment