Wednesday, October 03, 2012

திவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை: மாகாண அமைச்சர் ஹாபிஸ்

hafiz_nazeerதிவிநெகும சட்டமூலத்தினால் சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான ஹாபிஸ் நஷீர் அஹமட் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
இதன் காரணமாகவே கிழக்கு மாகாண சபையில் இந்த சட்டமூலம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது எமது கட்சி ஆதரவாக வாக்களித்தது என அவர் குறிப்பிட்டார்.
இந்த திவிநெகும சட்டமூலத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள எந்த அதிகாரங்களும் மீளப்பெறப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் தொடர்பில் கிழக்கு மாகாண சபையின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஏழு பேரும் கலந்தாலோசித்த பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது என மாகாண அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன் இந்த சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையில் நிறைவேற்றபட்டதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment