Monday, December 03, 2012

பழிவாங்கும் நோக்கில் பல்கலை மாணவர்கள் அரசினால் கைது : த. தே. ம. முன்னணி தெரிவிப்பு

kajenthiranயாழ். பல்கலைக்கழக மாணவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் பொலிஸார் கைது செய்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி இலங்கையிலுள்ள வெளி நாட்டுத் தூதரகங்களுக்கு அறிவித்து விடுதலைக்கு குரல் கொடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னணியின் செயலாளர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார். 
இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய தூதரகங்களுடன் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment