Tuesday, June 18, 2013

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை மீறியது இந்திய அரசாங்கமே

jr_rajeev_agreement01தமிழீழ விடுதலைப் புலிகளை நிராயுதபாணிகளாக்குவது என இந்தியா அளித்த வாக்குறுதியை அந்த நாடு நிறைவேற்றத் தவறி விட்டதாக ஹெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
13 வது சட்டமூலம் ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் மாகாண சபைகள் தோற்றுவிக்கப்பட்டன.
இதற்கான இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடும் போது புலிகளை முற்றாக நிராயுதாபணிகளாக ஆக்குவதென அன்று இந்தியா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாததன் மூலம் இந்தச் சட்டமூலத்தை இந்தியாவே மீறியுள்ளதே தவிர இலங்கை அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக நிராயுதபாணிகளாக ஆக்குவதென இந்தியா கூறிவிட்டு அவர்களை ஆயுதபாணிகளாகவே மாற்றியது.
எனவே, 13 வது திருத்தச் சட்டமூலத்தை மீறி இந்தியா எப்போதா செயற்பட்டுவிட்டது.
அதேளை, இலங்கைப் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்வோம், வெளியார் தலையீடு தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment