
ஆபிரிக்க நாடுகளை தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் சிறிலங்கா அரசின் திட்டத்தின் ஒரு கட்டமாகவே மகிந்த ராஜபக்சவின் இந்தப் பயணம் அமையவுள்ளது.
இதன்போது தன்சானிய அதிபர் ஜகாயா கிக்வெரேயை சந்தித்து பேசவுள்ள மகிந்த ராஜபக்ச, இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இந்த ஆண்டு இறுதியுடன் அங்கோலா, உகண்டா, லிபியா, மொரிட்டானியா ஆகிய நாடுகளின் உறுப்புரிமைக்காலம் முடிவடையவுள்ளது.
ஜெனிவாவில் தமக்குச் சாதகமான நிலையை உருவாக்கும் வகையில், தன்பக்கம் இழுத்து தன்சானியாவை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வைப்பது சிறிலங்கா அதிபரின் திட்டமாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment