Sunday, December 28, 2014

மேலும் அதிரடி ! பொன்சேகா மகிந்தர் பக்கம் தாவுவாரா ?


undefinedமுன்னாள் இராணுவ தளபதியும், ஜனநாயககட்சின் தலைவருமான சரத்பொன்சேகா அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. இது குறித்து பேச்சுக்கள் இடம்பெறுவதாகவும், அரசாங்கம் பொன்சேகா கேட்பதை வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரியவருகின்றது. அரசாங்கத்தில் அவர் இணையும்பட்சத்தில் பறிக்கப்பட்ட அவரது உரிமைகள், ஜெனரல்பதவி,ஓய்வூதியம்,உட்பட அணைத்தையும் வழங்க தயார் எனவும் அரசாங்கம் இந்த பேச்சுக்களின் போது உறுதியளித்துள்ளது.

இதேவேளை அரசாங்கம் பாதுகாப்பு அமைச்சில் எந்த பதவியும் வழங்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாகவே பொன்சேகாவின் மருமகன் உறவினரான தனுன திலகரட்ணவிற்கு பினைவழங்கப்பட்டதாகவும்,அவரது மனைவியும், பிள்ளைகளும் அவரை அரசுடன் சேருமாறு அழுத்தம் கொடுப்பதாகவும், தகவல்வெளியாகியுள்ளன.
இது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடன் சரத்பொன்சேகா நேற்று தீவிரமாக ஆராய்ந்துள்ளார், இந்த பேச்சுக்களில் திருப்தி அடையாவிட்டால் அவர் கட்சியை கலைத்துவிட்டு அவர் அடுத்த சில நாட்களில் அரசாங்கத்துடன் இணையலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை இந்தத் தகவல்கள் குறித்து பொன்சேகா தரப்பினர் மறுத்து உள்ளதோடு திட்டமிட்ட வகையில் எதிர்த்தரப்பை பலவீகமடையச் செய்யும் செய்தி இதுவெனத் தெரிவித்துள்ளது....

No comments:

Post a Comment