Thursday, January 22, 2015

கருணாவும் ஒருவர் இரவிலும் தமது இடத்தை மாற்றி மாற்றிக்கொண்டு அலைகிறார்கள் !



அரசியலில் தற்போது அநாதையாக்கப்பட்டுள்ள கருணா மற்றும் பிள்ளையான் ஒவர் இரவிலும் தமது இருப்பிடத்தை மாற்றி வருகிறார்கள் என்று அறியப்படுகிறது. ஒரு நாள் ஒரு உறவினர் வீட்டிலும், மறு நாள் ஹோட்டலிலும், சில நாட்கள் நண்பர்கள் வீட்டிலும் தங்கி வருகிறார்கள். குறிப்பாக ஒரு இரவில் தங்கியுள்ள இடத்தில் மறு நாள் தங்குவது இல்லை. அவ்வளவு மரணப் பயத்தில் உள்ளார்கள் என்று கூறப்படுகிறது. கருணா சரத்பொன்சேகாவிடம் சென்று, தன்னை அவர் பக்கம் சேர்த்துக்கொள்ளுமாறு மன்றாடியுள்ளார். இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

இதனால் தற்போது சரத் பொன்சேகா தனது வேலைகளைப் பார்க ஆரம்பித்துவிட்டார். தற்போது கருணாவுக்கு சரத் பொன்சேகா உதவுவது இல்லை. இதன் காரணமாகவே அவர் நாடோடி வாழ்கையில் இருக்கிறார். இன் நிலையில் பிள்ளையானையும் அவர் சகா இனிய பாரதியையும் மக்களே துரத்துகிறார்கள். இவர்கள் இருவரும் மக்களுக்கு பயந்தே மறைவான இடத்தில் வாழ்ந்து வருகிறார்கள் என்று மேலும் அறியப்படுகிறது.source:athirvu

No comments:

Post a Comment